Friday 18 December 2015

சமமான மன நிலை ஞானமே மதத்தின் வழி-(காஞ்சி மஹா பெரியவர்)

சமமான மன நிலை ஞானமே மதத்தின் வழி-(காஞ்சி மஹா பெரியவர்)

துன்பத்தைப் பற்றி வருந்திக் கொண்டிருப்பது
மதத்தின் வழியாகாது. நாம் சங்கடமான நிலைமையில் இருக்கும் போது தீய எண்ணங்கள்  நம் மனதில் புகாமல் இருக்க பிராத்தனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் சமாளிக்கும் திறமை வலுப்பெற்று துன்பமே அர்த்தமற்றதாகிவிடும். அத்தகைய நோக்கு ஞானத்தில் பிறப்பதாகும். ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியாலேயே ஞானத்தை அடைய வேண்டும். ஆகவேதான், நம் மதம் தனி மனிதனை அடிப்படையாகக் கொண்டது. நம்மைச் சேர்ந்த, நாம் செய்யும் ஒவ்வொன்றையும் ஆண்டவனுக்கு அர்ப்பணித்து விட்டால் சுக துக்கங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான சமமான மன நிலையை நாம் பெறலாம்."
மந்திரமாம் திருநீர் பூசி நம் மனதினிலேயவரை வைக்க
விந்தைகளை அவர் புரிந்திருப்பார் வினைகளை அருத்திருப்பார்
கடலாடி அமுதம் கடைந்து அமரரைக் காத்து நின்ற 
கருவண்ணன் உருவான குருவவரே!
எப்போதும் மலர்ச்சியான உம் முகம் காணத் தவமிருக்கும் மக்கள் கூட்டம்!!
பூவில் நிறைந்த தேனினையே நுகரக் காத்திருக்கும் தேனீக்களைப் போல்
உம் நிறைந்த ஞானத்தையே பருகக் காத்திருக்கும் பக்தர் தம் கூட்டம்!! ..
வேதத்தின் நாயகனாம் மா தவமாம் மா மணியாம்
ஆதவனின் கதிரொளியாம் ஆன்மீக குருவவரே!
சோகங்கள் தீர்த்திடுவார் சுகங்கள் சேர்த்திடுவார்
உலகிலுள்ள உயிரனைத்தும் படைக்கின்ற முதலான
ப்ரஹ்ம ஸ்வரூபமாய் வந்துதித்த குருவவரே!
எங்கெங்கும் பரவும் மகரந்தம் போல் பாரெங்கும் பரவி நிற்குது உம் புகழ்!!
சிவனே என்றழைக்க சிவனென்று சிவமாய் துணை நிற்கும் குருவே!
ஹரனே என்றழைக்க அரணாக காத்து நிற்கும் ஹரியும் நீரே! அருளாளன் நீரே!
பிரமமாய் உம்மை ஏற்று பிரமத்தில் பூஜிக்க பிரம்மமே நீரும் வந்தருள்
குருவாகி திருவாகி குறை தீர்க்கும் அருளாகி குணம் தந்து எம்மை காத்து 
அமைதியை தந்திடும் உம் அதிஷ்டானமே! அருளைப் பொழிந்திடும் தலமே!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!!!

Sunday 13 December 2015

ருத்ராக்ஷம்...

ருத்ராக்ஷம்...
இதை பற்றி நிறைய பதிவுகள் இங்கு வந்து உள்ளன அன்பர்கள் தேவைக்கு எளிமையாக சில தகவல் மட்டும் ...
அக்க்ஷம் என்றால் கண்கள் என்று ஒரு பொருள் உண்டு .ருத்ராக்ஷம். என்றால் சிவனின் கண்கள் என்று சொல்லலாம் .
மனிதர்களுக்கு உடலில் உள்ள உறுப்புகள் வித விதமாக அமையலாம் ஆனால் கண்கள் எல்லோருக்கும் ஒன்று போல் தான் அளவு மேலும் 2 கண்கள் தான் உண்டு .
இதுவே ஒளியை கொண்டு வழிகாட்டுதல் என்னும் செயலை செய்கிறது .
2 கண்கள் இருந்தாலும் ஒரு பொருளை பார்க்கும் பொழுது இரண்டும்
ஒன்று போலத்தான் பார்க்கும் .
உடலில் கண்பார்வை இல்லை என்ற நிலை வந்தால் இதை விட மிக பெரிய தண்டனை கிடையாது .
இப்படி உள்ள கண்கள் சிவ பெருமானுக்கு ,வலது, இடது மற்றும் அக்னி என்னும் புருவ மத்தியில் ஒன்று .
இந்த கண்ணை ஞான கண் என்றும் ,சுடர்விழி என்றும் சொல்லலாம் .
இந்த கண் தான் மண் மீது விழுந்து தாவரமாக முளைத்து ருத்ராக்ஷம் என்று பெயர் கொண்டு கனிகளை முதலில் தோற்று வித்து பிறகு காய்களாக உருமாரி உதிர்ந்து மண்ணில் விழுகிறது .
இதில் பல வகைகள் உண்டு .
இந்த மணிகளின் தன்மைகளை புரிந்து கொள்வோம் .
எந்த மாதிரியான வெப்பம் /குளிர் என்றாலும் தாங்கும் சக்தி படைத்தவைகள் இந்த மணிகள் .
மனிதனின் உடலில் இவைகள் அணியப்பட்டு இருக்கும் பொழுது உடலில் உள்ள வெப்பத்தை சரி செய்யும் .
கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் பொழுது ஜடார்அக்னியை
சமம் படுத்தி நன்மை செய்யும் .
மேலும் கழுத்தில் இருக்கும் பொழுது அதுனுடன் சேர்த்து நாம் சுவாசம்
செய்வோம் இப்படி உள்ளே போகும் பிராணன் ரத்தத்துடன் கலந்து நன்மை செய்யும் .இப்படி கொஞ்சம் கொஞ்சம்மாக ஒரு விகிதத்துடன்
உடலில் கலந்து ஒரு பாதுகாப்பு ஏற்படுத்தும் .
நாம் குளிக்கும் பொழுது நீரில் கலந்து மேல் தோலின் வழியாக உள்ளே சென்று கொண்டு இருக்கும் இதுவும் ஒரு வகையில் உடலுக்கு வெளியில்
ஒரு பாதுகாப்பு தரும் .
இப்படி பல நன்மைகள் செய்யும் இந்த மணிகள் பல வகை உண்டு ..
இதை எந்த எந்த நட்சத்திரம் உள்ள நபர்கள் எதை அணிய வேண்டும் என்று பார்ப்போம் ...
...
1. அஸ்வினி – ஒன்பது முகம்.
2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.
4. ரோஹிணி – இரண்டு முகம்.
5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.
6. திருவாதிரை – எட்டு முகம்.
7. புனர்பூசம் – ஐந்து முகம்.
8. பூசம் – ஏழு முகம்.
9. ஆயில்யம் – நான்கு முகம்.
10. மகம் – ஒன்பது முகம்.
11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
12. உத்திரம் – பனிரெண்டு முகம்
13. ஹஸ்தம் – இரண்டு முகம்.
14. சித்திரை – மூன்று முகம்.
15. ஸ்வாதி – எட்டு முகம்.
16. விசாகம் – ஐந்து முகம்.
17. அனுஷம் – ஏழு முகம்.
18. கேட்டை – நான்கு முகம்.
19. மூலம் – ஒன்பது முகம்.
20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்.
21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.
22. திருவோணம் – இரண்டு முகம்.
23. அவிட்டம் – மூன்று முகம்.
24. சதயம் – எட்டு முகம்.
25. பூரட்டாதி – ஐந்து முகம்.
26. உத்திரட்டாதி – ஏழு முகம்.
27. ரேவதி – நான்கு முகம்.

உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான். இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.
உருத்திராட்சத்தை தாசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன. நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம்.
இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள் ஆகும். ஒரே அளவுள்ளதும், உறுதியானதும், பெரியதும், சம முத்துகள் போன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து பின் உடலில் அணிய வேண்டும்.
உருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை:::.
*இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரிஸ்வரர் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.
*மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.
*நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.
*ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.
*ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், கிடைக்கும்.
*அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.
*ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.
*எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்ரிதி அடையும். அதிதேவதை அஷ்டவசு.
*இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.
*பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படும்.
*பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.
*பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.
*பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.
*உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
* 108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.
* உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள்.
அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம்.
தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூஜித்து அணிகின்ற மானிடர்கள் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.
தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும். பிறப்பு - இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் கண்டிப்பாக அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்போரும், புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.
'ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்'
-என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.

நன்றி ....

சில பயனுள்ள தகவல்கள்...

சில பயனுள்ள தகவல்கள்...


1.கோயில்கள்,நதிக்கரைகள்,பசுமடம்,மகான்களின் சமாதி
இந்த இடத்தில், தீபம் ஏற்றி வழிபட்டால்,நமது தரித்திரம் விலகும்.புத்தியிலும்,மனத்திலும் உள்ள குழப்பங்கள் நீங்கும்.
2.திங்கள், புதன், வியாழன் திருமணத்தை நடத்த உகந்த நாட்கள் என்று சோதிட நூல்கள் சொல்கிறது .
3.வெள்ளி அன்று நரசிம்மர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஒரு அம்பாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தால் பிரிந்தவர் சேர்வர்
செவ்வாய் அன்று தரிசனம் செய்து வந்தால் கடன் எளிதில் முடிய வழி கிடைக்கும் ,
புதன் அன்று தரிசனம் செய்து வந்தால் நல்ல உத்தியோகம் அமையும்
4.ஒரே வீட்டில் இரண்டு அடுப்பு வைத்து சமைக்க கூடாது (அதாவது கூட்டு குடும்பமாக இருந்து சண்டை போட்டு கொண்டு மாமியார் மருமகள் தனி தனியாக சமைப்பது,அல்லது சகோதரர்கள் ஒன்றாக இருந்து சமைப்பது ,அல்லது பிறருடன் ஒரே வீட்டில் இருந்து கொண்டு வாழ்வது )
5.வீட்டில் உள்ள ஆண்கள் விளக்கு தீபம் ,அடுப்பில் நெருப்பு போன்றதை பற்ற வைக்க கூடாது ..(பெண்களின் கைகளில் அக்னி உள்ளது ,இவர்கள் தான் ஏற்ற வேண்டும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது )( இதற்கும் தொழிலுக்கும் சம்பம்தம் கிடையாது )
6.ஜபம் செய்யும் திசையும் பலனும்.....
a.கிழக்கு(East) நோக்கு ஜபம் செய்தால் வசியம்
b.தென்கிழக்கு(Southeast) நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்
c .தெற்கு(South) நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை
d . தென்மேற்கு(Southwestern) நோக்கு ஜபம் செய்தால் வருமை
e . மேற்கு(West) நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு
f . வடமேற்கு(Northwest) நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்
g .வடக்கு(North) நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்
h .வடகிழ்க்கு(Northeast) நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்....
ஜபம் செய்யும் இடமும் பலனும்......
i வீடு- பத்து மடங்கு பலன் பலன்
j.கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன்
k.குளம்- ஆயிரம் மடங்கு பலன்
l.ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்
m.மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன்
n.சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன்
o.அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன்
p.சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன்....
சில சோதிட தகவல் ..
1.பிரதமை அன்று பிறந்தவர்கள்
அம்பிகைக்கு நெய் படைத்து வழிபடவேண்டும்.
2. துவிதியை அன்று பிறந்தவர்கள்
சர்க்கரை படைத்து வழிபடவேண்டும்
.
3. திருதியை அன்று பிறந்தவர்கள்
பால் படைத்து வழிபடவேண்டும்.
4. சதுர்த்தி அன்று பிறந்தவர்கள்
பட்சணம் படைத்து வழிபடவேண்டும்
.
5. பஞ்சமி அன்று பிறந்தவர்கள்
வாழைப் பழம் படைத்து வழிபடவேண்டும்
.
6. சஷ்டி அன்று பிறந்தவர்கள்
தேன் படைத்து வழிபடவேண்டும்.
7. சப்தமி அன்று பிறந்தவர்கள்
வெல்லம் படைத்து வழிபடவேண்டும்
.
8. அஷ்டமி அன்று பிறந்தவர்கள்
தேங்காய் படைத்து வழிபடவேண்டும்.
9. நவமி அன்று பிறந்தவர்கள்
நெற்பொறி படைத்து வழிபடவேண்டும்.
10. தசமி அன்று பிறந்தவர்கள்
கருப்பு எள் படைத்து வழிபடவேண்டும்.
11. ஏகாதசி அன்று பிறந்தவர்கள்
தயிர் படைத்து வழிபடவேண்டும்.
12. துவாதசி அன்று பிறந்தவர்கள்
அவல் படைத்து வழிபடவேண்டும்.
13. திரயோதசி அன்று பிறந்தவர்கள்
கடலை படைத்து வழிபடவேண்டும்.
14. சதுர்த்தசி அன்று பிறந்தவர்கள்
சத்துமாவு படைத்து வழிபடவேண்டும்.
15. பௌர்ணமி/ அமாவாசை அன்று பிறந்தவர்கள் பாயசம் படைத்து வழிபடவேண்டும்
இவைகளை யாருக்காவது தானம் செய்தாலும் உங்களுக்கு புண்ணிய பலன் கிடைக்கும்.
நீங்கள் விரும்பும் தெய்வத்திற்கு படைப்பதும் குறிப்பாக அம்பாளுக்கு படைப்பது சிறந்தது .....
குறிப்பு : இங்கே உள்ள தகவல்கள் சில நூல்களில் சொல்லப்பட்டவை ,
என்னுடைய கற்பனை இல்லை ...
நன்றி ...

ஸ்ரீ மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்!.....

ஸ்ரீ மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்!.....


சு க முனிவர் ஒரு முறை ஸ்ரீமகாலட்சுமிதேவியிடம், ‘‘செல்வம் உட்பட சகல வளங்களையும் அருளும் தேவியே! பக்தர்களின் வீடுகளில் தாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டுமெனில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’’ என்று கனிவுடன் கேட்டார்.
‘‘வெள்ளை மாடப் புறாக்கள் வாழும் இடம், அடக்கமும் அமைதியும் கொண்ட பெண்கள் வாழும் இல்லம், நவதானியங்கள் நிறைந்துள்ள இடம், தானம் செய்து எல்லோருடனும் பகிர்ந்து உண்டு வாழும் நல்ல மனிதர்கள், இனிமையான சொற் களைப் பேசுபவர்கள், பணிவு நிறைந்தவர்கள், நாவை அடக்கியவர்கள், சாப்பிடுவ திலேயே நீண்ட நேரத்தைக் கழிக்காதவர்கள், பெண் களை தெய்வமாக மதிப்பவர்கள் போன்றவை அனைத்திலும் நான் நித்திய வாசம் செய்வேன்.
மேலும் சங்கு, நெல்லிக்காய், கோமியம், தாமரை மலர், வெண்மை நிற உடைகள், சுத்தமான ஆடைகள், சுத்தமான இல்லங்கள் இவற்றிலும் நான் வாசம் செய்கிறேன். தூய உள்ளம் கொண்டு பரிசுத்தமாக இருப்போர் அனைவரிடத்திலும் நான் நிச்சயம் இருப்பேன்!’’ என்று சுக முனிவருக்குப் பதில் கூறினாள் ஸ்ரீமகாலட்சுமி.
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...

தெரிந்ததும் தெரியாததும்....

சில வித்தியாசமான தகவல்கள் .......

லக்ஷ்மி அருள் தழைக்க ....
1.காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
2.தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
3. ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
4.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
5. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
6.தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
7.வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
8.தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
9. பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது.
10.சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

வாஸ்து தகவல் ....
1.வீட்டில் பப்பாளி மரம், கறிவேப்பிலை மரம் மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும் .... ,பப்பாளி மரம் பெண்களையும்,
கறிவேப்பிலை ஆண்களையும் குறிக்கும் ...
2.முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.
3.ஜாதி முல்லை ,மல்லிகை ,பாதிரி ,தாமரை ,தும்பை ,பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்பது மனை தோசத்தை சரி செய்யும் ...
4.தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது ,தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும் ...
5.நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால்
அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ,ஆரோக்கியம் கெட்டு விடும் ...
5. துணை இல்லாத அல்லது மறு கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது ...
6.ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட கூடாது ..
7.வீட்டின் வாசலில் அல்லது நிலகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது ...
8.அசைவ கழிவுகள் ,மலமூத்திர கழிவு தேக்கம், பழைய துணிகள்,குப்பைகள் போன்றவற்றை வாசலில் இருக்க கூடாது ..
9. சந்தன முல்லை ,துளசி ,பவளமல்லி ,பன்னிர் செடி ,திருநீர்பத்திரி ,கற்பூரவள்ளி போன்ற தெய்விக வாசனை தாவரம்கள் வளர்க்க அம்பாளின் அருள் ஆசிகள் கிடைக்கும் .
10.கோபுரம் நிழல் ,அல்லது கொடிமரத்தின் நிழல் நம்முடைய மனையின் மீது விழாத படி வீடு கட்டவேண்டும் .மேலும் பெருமாள் கோவிலின் பின்புறம் சிவன் ,கணபதி கோவில் எதிர் புறம் வீடு கட்ட கூடாது .....


சில வித்தியாசமான தகவல்கள் .......

1.விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன் ,பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை)...இதை வியாபார இடத்திலும் செய்யலாம் ..


2.தொட்ட சிணுங்கி ,முடக்கத்தான் ,துளசி ,வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல் ,ஏவல் ,சூன்யும் ,வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது ..


3.வீட்டில் விக்ரம்கள் வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால் ,தேங்காய் நீர் ,அரைத்த சந்தானம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும் ,

மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் பண்ணலாம் ...இவைகள் இல்லை என்றால் செய்யாமல் இருங்கள் .


4.மயில் தோகை வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்கும் .(சில எண்ணிக்கை மட்டும் ).


5.கோவிலகளில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும் ,

(பதப்பட்ட பால் வேண்டாம் ),அல்லது இளநீரை தரவேண்டும் ,

இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும் ,சாபத்தை போக்கும் வல்லமை உடையது ..


6.வெள்ளை மிளகு ,கடுகு ,காய்ந்த வில்வ இலைகள் ,நாய் கடுகு (மிளகு )

பால் சாம்பிராணி ,கடுக்காய் ,காய்ந்த வேப்ப இலைகள் ,ஓமம் ,தான்றி காய் ,காய்ந்த மருதாணி இலை,மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அம்மாவசை ,பௌர்ணமி ,வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல

நன்மைகளை தரும் ,குல சாமிகளின் ஆசிகள் கிடைக்கும் .(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .)


7.எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வெளியில் செல்லும் பொழுது அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும் ,பசுவிற்கு வாழை பழம் தருவதும் துவங்கும் காரியம் வெற்றியடைய செய்யும் ..


8.கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்க பெருமாளும் கருப்பு சாமியும் குலத்தை காப்பார் ..


9.ஒரே நாளில் 9 வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனிதேவரின் ஆசிகள் பெற்று ,ஆயுள்

தோஷம் நீங்கி ஆரோகியம் ஏற்படும் (தனியாக உள்ள கோவில்கள் )


10.பசு நெய்யை செப்பு பத்திரத்தில்(தாமிரம் ) நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரிய படுத்தும் .
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...