Friday 18 December 2015

சமமான மன நிலை ஞானமே மதத்தின் வழி-(காஞ்சி மஹா பெரியவர்)

சமமான மன நிலை ஞானமே மதத்தின் வழி-(காஞ்சி மஹா பெரியவர்)

துன்பத்தைப் பற்றி வருந்திக் கொண்டிருப்பது
மதத்தின் வழியாகாது. நாம் சங்கடமான நிலைமையில் இருக்கும் போது தீய எண்ணங்கள்  நம் மனதில் புகாமல் இருக்க பிராத்தனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் சமாளிக்கும் திறமை வலுப்பெற்று துன்பமே அர்த்தமற்றதாகிவிடும். அத்தகைய நோக்கு ஞானத்தில் பிறப்பதாகும். ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியாலேயே ஞானத்தை அடைய வேண்டும். ஆகவேதான், நம் மதம் தனி மனிதனை அடிப்படையாகக் கொண்டது. நம்மைச் சேர்ந்த, நாம் செய்யும் ஒவ்வொன்றையும் ஆண்டவனுக்கு அர்ப்பணித்து விட்டால் சுக துக்கங்களால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான சமமான மன நிலையை நாம் பெறலாம்."
மந்திரமாம் திருநீர் பூசி நம் மனதினிலேயவரை வைக்க
விந்தைகளை அவர் புரிந்திருப்பார் வினைகளை அருத்திருப்பார்
கடலாடி அமுதம் கடைந்து அமரரைக் காத்து நின்ற 
கருவண்ணன் உருவான குருவவரே!
எப்போதும் மலர்ச்சியான உம் முகம் காணத் தவமிருக்கும் மக்கள் கூட்டம்!!
பூவில் நிறைந்த தேனினையே நுகரக் காத்திருக்கும் தேனீக்களைப் போல்
உம் நிறைந்த ஞானத்தையே பருகக் காத்திருக்கும் பக்தர் தம் கூட்டம்!! ..
வேதத்தின் நாயகனாம் மா தவமாம் மா மணியாம்
ஆதவனின் கதிரொளியாம் ஆன்மீக குருவவரே!
சோகங்கள் தீர்த்திடுவார் சுகங்கள் சேர்த்திடுவார்
உலகிலுள்ள உயிரனைத்தும் படைக்கின்ற முதலான
ப்ரஹ்ம ஸ்வரூபமாய் வந்துதித்த குருவவரே!
எங்கெங்கும் பரவும் மகரந்தம் போல் பாரெங்கும் பரவி நிற்குது உம் புகழ்!!
சிவனே என்றழைக்க சிவனென்று சிவமாய் துணை நிற்கும் குருவே!
ஹரனே என்றழைக்க அரணாக காத்து நிற்கும் ஹரியும் நீரே! அருளாளன் நீரே!
பிரமமாய் உம்மை ஏற்று பிரமத்தில் பூஜிக்க பிரம்மமே நீரும் வந்தருள்
குருவாகி திருவாகி குறை தீர்க்கும் அருளாகி குணம் தந்து எம்மை காத்து 
அமைதியை தந்திடும் உம் அதிஷ்டானமே! அருளைப் பொழிந்திடும் தலமே!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!!!

Sunday 13 December 2015

ருத்ராக்ஷம்...

ருத்ராக்ஷம்...
இதை பற்றி நிறைய பதிவுகள் இங்கு வந்து உள்ளன அன்பர்கள் தேவைக்கு எளிமையாக சில தகவல் மட்டும் ...
அக்க்ஷம் என்றால் கண்கள் என்று ஒரு பொருள் உண்டு .ருத்ராக்ஷம். என்றால் சிவனின் கண்கள் என்று சொல்லலாம் .
மனிதர்களுக்கு உடலில் உள்ள உறுப்புகள் வித விதமாக அமையலாம் ஆனால் கண்கள் எல்லோருக்கும் ஒன்று போல் தான் அளவு மேலும் 2 கண்கள் தான் உண்டு .
இதுவே ஒளியை கொண்டு வழிகாட்டுதல் என்னும் செயலை செய்கிறது .
2 கண்கள் இருந்தாலும் ஒரு பொருளை பார்க்கும் பொழுது இரண்டும்
ஒன்று போலத்தான் பார்க்கும் .
உடலில் கண்பார்வை இல்லை என்ற நிலை வந்தால் இதை விட மிக பெரிய தண்டனை கிடையாது .
இப்படி உள்ள கண்கள் சிவ பெருமானுக்கு ,வலது, இடது மற்றும் அக்னி என்னும் புருவ மத்தியில் ஒன்று .
இந்த கண்ணை ஞான கண் என்றும் ,சுடர்விழி என்றும் சொல்லலாம் .
இந்த கண் தான் மண் மீது விழுந்து தாவரமாக முளைத்து ருத்ராக்ஷம் என்று பெயர் கொண்டு கனிகளை முதலில் தோற்று வித்து பிறகு காய்களாக உருமாரி உதிர்ந்து மண்ணில் விழுகிறது .
இதில் பல வகைகள் உண்டு .
இந்த மணிகளின் தன்மைகளை புரிந்து கொள்வோம் .
எந்த மாதிரியான வெப்பம் /குளிர் என்றாலும் தாங்கும் சக்தி படைத்தவைகள் இந்த மணிகள் .
மனிதனின் உடலில் இவைகள் அணியப்பட்டு இருக்கும் பொழுது உடலில் உள்ள வெப்பத்தை சரி செய்யும் .
கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் பொழுது ஜடார்அக்னியை
சமம் படுத்தி நன்மை செய்யும் .
மேலும் கழுத்தில் இருக்கும் பொழுது அதுனுடன் சேர்த்து நாம் சுவாசம்
செய்வோம் இப்படி உள்ளே போகும் பிராணன் ரத்தத்துடன் கலந்து நன்மை செய்யும் .இப்படி கொஞ்சம் கொஞ்சம்மாக ஒரு விகிதத்துடன்
உடலில் கலந்து ஒரு பாதுகாப்பு ஏற்படுத்தும் .
நாம் குளிக்கும் பொழுது நீரில் கலந்து மேல் தோலின் வழியாக உள்ளே சென்று கொண்டு இருக்கும் இதுவும் ஒரு வகையில் உடலுக்கு வெளியில்
ஒரு பாதுகாப்பு தரும் .
இப்படி பல நன்மைகள் செய்யும் இந்த மணிகள் பல வகை உண்டு ..
இதை எந்த எந்த நட்சத்திரம் உள்ள நபர்கள் எதை அணிய வேண்டும் என்று பார்ப்போம் ...
...
1. அஸ்வினி – ஒன்பது முகம்.
2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.
4. ரோஹிணி – இரண்டு முகம்.
5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.
6. திருவாதிரை – எட்டு முகம்.
7. புனர்பூசம் – ஐந்து முகம்.
8. பூசம் – ஏழு முகம்.
9. ஆயில்யம் – நான்கு முகம்.
10. மகம் – ஒன்பது முகம்.
11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்.
12. உத்திரம் – பனிரெண்டு முகம்
13. ஹஸ்தம் – இரண்டு முகம்.
14. சித்திரை – மூன்று முகம்.
15. ஸ்வாதி – எட்டு முகம்.
16. விசாகம் – ஐந்து முகம்.
17. அனுஷம் – ஏழு முகம்.
18. கேட்டை – நான்கு முகம்.
19. மூலம் – ஒன்பது முகம்.
20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்.
21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.
22. திருவோணம் – இரண்டு முகம்.
23. அவிட்டம் – மூன்று முகம்.
24. சதயம் – எட்டு முகம்.
25. பூரட்டாதி – ஐந்து முகம்.
26. உத்திரட்டாதி – ஏழு முகம்.
27. ரேவதி – நான்கு முகம்.

உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான். இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.
உருத்திராட்சத்தை தாசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன. நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம்.
இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள் ஆகும். ஒரே அளவுள்ளதும், உறுதியானதும், பெரியதும், சம முத்துகள் போன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து பின் உடலில் அணிய வேண்டும்.
உருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை:::.
*இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரிஸ்வரர் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.
*மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.
*நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.
*ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.
*ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், கிடைக்கும்.
*அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.
*ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.
*எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்ரிதி அடையும். அதிதேவதை அஷ்டவசு.
*இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.
*பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படும்.
*பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.
*பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.
*பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.
*உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
* 108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.
* உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள்.
அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம்.
தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூஜித்து அணிகின்ற மானிடர்கள் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.
தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும். பிறப்பு - இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் கண்டிப்பாக அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்போரும், புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.
'ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்'
-என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.

நன்றி ....

சில பயனுள்ள தகவல்கள்...

சில பயனுள்ள தகவல்கள்...


1.கோயில்கள்,நதிக்கரைகள்,பசுமடம்,மகான்களின் சமாதி
இந்த இடத்தில், தீபம் ஏற்றி வழிபட்டால்,நமது தரித்திரம் விலகும்.புத்தியிலும்,மனத்திலும் உள்ள குழப்பங்கள் நீங்கும்.
2.திங்கள், புதன், வியாழன் திருமணத்தை நடத்த உகந்த நாட்கள் என்று சோதிட நூல்கள் சொல்கிறது .
3.வெள்ளி அன்று நரசிம்மர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஒரு அம்பாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தால் பிரிந்தவர் சேர்வர்
செவ்வாய் அன்று தரிசனம் செய்து வந்தால் கடன் எளிதில் முடிய வழி கிடைக்கும் ,
புதன் அன்று தரிசனம் செய்து வந்தால் நல்ல உத்தியோகம் அமையும்
4.ஒரே வீட்டில் இரண்டு அடுப்பு வைத்து சமைக்க கூடாது (அதாவது கூட்டு குடும்பமாக இருந்து சண்டை போட்டு கொண்டு மாமியார் மருமகள் தனி தனியாக சமைப்பது,அல்லது சகோதரர்கள் ஒன்றாக இருந்து சமைப்பது ,அல்லது பிறருடன் ஒரே வீட்டில் இருந்து கொண்டு வாழ்வது )
5.வீட்டில் உள்ள ஆண்கள் விளக்கு தீபம் ,அடுப்பில் நெருப்பு போன்றதை பற்ற வைக்க கூடாது ..(பெண்களின் கைகளில் அக்னி உள்ளது ,இவர்கள் தான் ஏற்ற வேண்டும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது )( இதற்கும் தொழிலுக்கும் சம்பம்தம் கிடையாது )
6.ஜபம் செய்யும் திசையும் பலனும்.....
a.கிழக்கு(East) நோக்கு ஜபம் செய்தால் வசியம்
b.தென்கிழக்கு(Southeast) நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்
c .தெற்கு(South) நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை
d . தென்மேற்கு(Southwestern) நோக்கு ஜபம் செய்தால் வருமை
e . மேற்கு(West) நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு
f . வடமேற்கு(Northwest) நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்
g .வடக்கு(North) நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்
h .வடகிழ்க்கு(Northeast) நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்....
ஜபம் செய்யும் இடமும் பலனும்......
i வீடு- பத்து மடங்கு பலன் பலன்
j.கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன்
k.குளம்- ஆயிரம் மடங்கு பலன்
l.ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்
m.மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன்
n.சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன்
o.அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன்
p.சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன்....
சில சோதிட தகவல் ..
1.பிரதமை அன்று பிறந்தவர்கள்
அம்பிகைக்கு நெய் படைத்து வழிபடவேண்டும்.
2. துவிதியை அன்று பிறந்தவர்கள்
சர்க்கரை படைத்து வழிபடவேண்டும்
.
3. திருதியை அன்று பிறந்தவர்கள்
பால் படைத்து வழிபடவேண்டும்.
4. சதுர்த்தி அன்று பிறந்தவர்கள்
பட்சணம் படைத்து வழிபடவேண்டும்
.
5. பஞ்சமி அன்று பிறந்தவர்கள்
வாழைப் பழம் படைத்து வழிபடவேண்டும்
.
6. சஷ்டி அன்று பிறந்தவர்கள்
தேன் படைத்து வழிபடவேண்டும்.
7. சப்தமி அன்று பிறந்தவர்கள்
வெல்லம் படைத்து வழிபடவேண்டும்
.
8. அஷ்டமி அன்று பிறந்தவர்கள்
தேங்காய் படைத்து வழிபடவேண்டும்.
9. நவமி அன்று பிறந்தவர்கள்
நெற்பொறி படைத்து வழிபடவேண்டும்.
10. தசமி அன்று பிறந்தவர்கள்
கருப்பு எள் படைத்து வழிபடவேண்டும்.
11. ஏகாதசி அன்று பிறந்தவர்கள்
தயிர் படைத்து வழிபடவேண்டும்.
12. துவாதசி அன்று பிறந்தவர்கள்
அவல் படைத்து வழிபடவேண்டும்.
13. திரயோதசி அன்று பிறந்தவர்கள்
கடலை படைத்து வழிபடவேண்டும்.
14. சதுர்த்தசி அன்று பிறந்தவர்கள்
சத்துமாவு படைத்து வழிபடவேண்டும்.
15. பௌர்ணமி/ அமாவாசை அன்று பிறந்தவர்கள் பாயசம் படைத்து வழிபடவேண்டும்
இவைகளை யாருக்காவது தானம் செய்தாலும் உங்களுக்கு புண்ணிய பலன் கிடைக்கும்.
நீங்கள் விரும்பும் தெய்வத்திற்கு படைப்பதும் குறிப்பாக அம்பாளுக்கு படைப்பது சிறந்தது .....
குறிப்பு : இங்கே உள்ள தகவல்கள் சில நூல்களில் சொல்லப்பட்டவை ,
என்னுடைய கற்பனை இல்லை ...
நன்றி ...

ஸ்ரீ மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்!.....

ஸ்ரீ மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்!.....


சு க முனிவர் ஒரு முறை ஸ்ரீமகாலட்சுமிதேவியிடம், ‘‘செல்வம் உட்பட சகல வளங்களையும் அருளும் தேவியே! பக்தர்களின் வீடுகளில் தாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டுமெனில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’’ என்று கனிவுடன் கேட்டார்.
‘‘வெள்ளை மாடப் புறாக்கள் வாழும் இடம், அடக்கமும் அமைதியும் கொண்ட பெண்கள் வாழும் இல்லம், நவதானியங்கள் நிறைந்துள்ள இடம், தானம் செய்து எல்லோருடனும் பகிர்ந்து உண்டு வாழும் நல்ல மனிதர்கள், இனிமையான சொற் களைப் பேசுபவர்கள், பணிவு நிறைந்தவர்கள், நாவை அடக்கியவர்கள், சாப்பிடுவ திலேயே நீண்ட நேரத்தைக் கழிக்காதவர்கள், பெண் களை தெய்வமாக மதிப்பவர்கள் போன்றவை அனைத்திலும் நான் நித்திய வாசம் செய்வேன்.
மேலும் சங்கு, நெல்லிக்காய், கோமியம், தாமரை மலர், வெண்மை நிற உடைகள், சுத்தமான ஆடைகள், சுத்தமான இல்லங்கள் இவற்றிலும் நான் வாசம் செய்கிறேன். தூய உள்ளம் கொண்டு பரிசுத்தமாக இருப்போர் அனைவரிடத்திலும் நான் நிச்சயம் இருப்பேன்!’’ என்று சுக முனிவருக்குப் பதில் கூறினாள் ஸ்ரீமகாலட்சுமி.
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...

தெரிந்ததும் தெரியாததும்....

சில வித்தியாசமான தகவல்கள் .......

லக்ஷ்மி அருள் தழைக்க ....
1.காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்
2.தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
3. ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.
4.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
5. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
6.தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
7.வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
8.தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
9. பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது.
10.சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

வாஸ்து தகவல் ....
1.வீட்டில் பப்பாளி மரம், கறிவேப்பிலை மரம் மிகவும் கவனித்து வளர்க்க வேண்டும் .... ,பப்பாளி மரம் பெண்களையும்,
கறிவேப்பிலை ஆண்களையும் குறிக்கும் ...
2.முட்கள் உள்ள செடியை வீட்டில் வளர்த்தால் பணம் தங்காது.
3.ஜாதி முல்லை ,மல்லிகை ,பாதிரி ,தாமரை ,தும்பை ,பாரிஜாதம், சாமந்தி போன்ற விநாயகர் மலர்களை வீட்டின் எல்லைக்குள் வளர்பது மனை தோசத்தை சரி செய்யும் ...
4.தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது ,தென்னை பிள்ளை மரத்தை ஜோடியாக தான் வளர்க்க வேண்டும் ...
5.நன்றாக வளர்ந்த வேப்பமரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டபட்டால்
அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை, சந்தோசம் ,ஆரோக்கியம் கெட்டு விடும் ...
5. துணை இல்லாத அல்லது மறு கன்று இல்லாத வாழை மரத்தை வெட்டியவருக்கு வம்ச விருத்தி இருக்காது ...
6.ஒற்றை பனைமரம் உள்ள இடத்தில வீடு கட்ட கூடாது ..
7.வீட்டின் வாசலில் அல்லது நிலகதவை திறந்தவுடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்க கூடாது ...
8.அசைவ கழிவுகள் ,மலமூத்திர கழிவு தேக்கம், பழைய துணிகள்,குப்பைகள் போன்றவற்றை வாசலில் இருக்க கூடாது ..
9. சந்தன முல்லை ,துளசி ,பவளமல்லி ,பன்னிர் செடி ,திருநீர்பத்திரி ,கற்பூரவள்ளி போன்ற தெய்விக வாசனை தாவரம்கள் வளர்க்க அம்பாளின் அருள் ஆசிகள் கிடைக்கும் .
10.கோபுரம் நிழல் ,அல்லது கொடிமரத்தின் நிழல் நம்முடைய மனையின் மீது விழாத படி வீடு கட்டவேண்டும் .மேலும் பெருமாள் கோவிலின் பின்புறம் சிவன் ,கணபதி கோவில் எதிர் புறம் வீடு கட்ட கூடாது .....


சில வித்தியாசமான தகவல்கள் .......

1.விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன் ,பௌர்ணமி அம்மாவசை அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும் (விநாயகரின் மறுநாள் கலைகபடும் மாலை)...இதை வியாபார இடத்திலும் செய்யலாம் ..


2.தொட்ட சிணுங்கி ,முடக்கத்தான் ,துளசி ,வில்வம்,கத்தாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல் ,ஏவல் ,சூன்யும் ,வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது ..


3.வீட்டில் விக்ரம்கள் வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால் ,தேங்காய் நீர் ,அரைத்த சந்தானம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும் ,

மனிதனின் கை கால்கள் படாத நீரில் அல்லது பழசாறு இவைகளிலும் பண்ணலாம் ...இவைகள் இல்லை என்றால் செய்யாமல் இருங்கள் .


4.மயில் தோகை வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்கும் .(சில எண்ணிக்கை மட்டும் ).


5.கோவிலகளில் அபிஷேகத்திற்கு கறவை பசும் பால் மட்டும் தரவும் ,

(பதப்பட்ட பால் வேண்டாம் ),அல்லது இளநீரை தரவேண்டும் ,

இவைகள் உங்கள் சந்ததி அனைவரின் பாபத்தையும் ,சாபத்தை போக்கும் வல்லமை உடையது ..


6.வெள்ளை மிளகு ,கடுகு ,காய்ந்த வில்வ இலைகள் ,நாய் கடுகு (மிளகு )

பால் சாம்பிராணி ,கடுக்காய் ,காய்ந்த வேப்ப இலைகள் ,ஓமம் ,தான்றி காய் ,காய்ந்த மருதாணி இலை,மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அம்மாவசை ,பௌர்ணமி ,வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல

நன்மைகளை தரும் ,குல சாமிகளின் ஆசிகள் கிடைக்கும் .(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .)


7.எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வெளியில் செல்லும் பொழுது அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும் ,பசுவிற்கு வாழை பழம் தருவதும் துவங்கும் காரியம் வெற்றியடைய செய்யும் ..


8.கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்க பெருமாளும் கருப்பு சாமியும் குலத்தை காப்பார் ..


9.ஒரே நாளில் 9 வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனிதேவரின் ஆசிகள் பெற்று ,ஆயுள்

தோஷம் நீங்கி ஆரோகியம் ஏற்படும் (தனியாக உள்ள கோவில்கள் )


10.பசு நெய்யை செப்பு பத்திரத்தில்(தாமிரம் ) நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரிய படுத்தும் .
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய...

Wednesday 21 October 2015

மனமே புரிந்து கொள் .....

மனமே புரிந்து கொள் .....

எனக்கு ஏற்படும் 
இன்பம் துன்பம் ஆகிய இரண்டு விளைவுகளும் இப்பொமுது செய்கின்ற காரியங்களின் பலன் அல்ல. முந்திய பிறவிகளில் நான் செய்திருக்கும் செயல்களின் பயன்.
உயிரானது
வெளி உலகத்தின் மீது கொண்டுள்ள ஆசைகளை எல்லாம் கடந்து உள்ளத்திற்கு உள்ளே சென்றால் இறைவனின் அருள் கிடைக்கும். எந்த உயிரானது இறைவனைத் தரிசிக்கவில்லையோ அந்த உயிரானது பேரின்பத்தை அடையாது.
மனமே
துன்பத்தை சோதனை என்று ஏற்றுக் கொண்டு விடு உனக்கேன் வேதனை வரப்போகிறது. அந்த சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும் படி நீ இறைவனை வேண்டிக்கொள். காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.
புரிந்து கொள்
எப்போது நீ போடும் திட்டங்கள் தோல்வி அடைகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறான் என்று பொருள். எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதி அளித்து விட்டான் என்று பொருள்.
வாழ்கையில்
ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு. இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை. ஏற்றத்தில் மயக்கமும் வீழ்ச்சியில் கலக்கமோ கொள்ளாதே .....
எனக்கு தோல்விகள் குழப்பம்கள் ஏற்படும் பொழுது நான் அடிக்கடி படிக்கும் வசனம்கள் .....
சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவ சிவ சிவ ஓம் ....

ஆதிசங்கரர் உபதேசம்

ஆதிசங்கரர்  உபதேசம்
“சேர்க்கும் பொருள் பறந்து போய்விடும்”
* ஒளியின் உதவியில்லாமல் எதையும் பார்க்க முடியாது.
உள்மனதில் தன்னைப் பற்றிய ஆராய்ச்சியின்றி ஞானத்தை அடைய முடியாது.
கண்ணாடி போன்ற தூய்மையான மனதில் ஞானம் தானாகவே விளங்கித் தோன்றும்.
நாம் ஒவ்வொருவரும் மனதை பரிசுத்தமாக்குவதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
* நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கி பிரகாசிக்கும்.
குருவிடம் உபதேசம், கேள்வி முதலியவற்றைக் கற்றால்,
மனமும் அழுக்குகள் நீங்கப்பெற்று ஒளியுடன் பிரகாசிக்கும்.
* பகலும், இரவும், மாலையும், காலையும் பருவகாலங்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது. வயது கழிகிறது. ஆனால், ஆசை மட்டும் மனிதனை விடுவதில்லை.
* மரணவேளை நெருங்கும் போது இலக்கண சூத்திரங்கள் நமக்கு கைகொடுக்காது.
ஆகையால், கோவிந்தனைக் கூப்பிடு. கோவிந்தனைப் பாடி வழிபடு.
* பொருள் தேடும் வரை சுற்றத்தினர் நம்மை நேசிப்பர்.
நோயினால் உடல் தளர்ந்த பின் யாரும் நம்மை கண்டுகொள்ளமாட்டார்கள்.
எனவே, பொருள் சேர்ப்பதில் உள்ள ஆசையை விட்டு நல்ல எண்ணங்களை மனத்தில் சிந்தனை செய்வது நல்லது. நம்முடைய நிலைக்கேற்ப பணி செய்து, கிடைக்கின்ற பொருளில் மகிழ்ச்சியாக வாழ்தலே அறிவுடை மையாகும்.
* பொருள், சுற்றம், இளமை முதலியவற்றில் கர்வம் கொள்ளக்கூடாது.
காலம் ஒரு கணத்தில் எல்லாவற்றையும் கொண்டு சென்று விடும்.
அதனால், மறைகின்ற அனைத்தையும் விட்டு இறைவனின் மீது சிந்தனையை செலுத்துங்கள்.
* எதிரி, நண்பன், மகன், உறவினன் என்று பிரித்துப் பார்க்காமல், யாரிடத்தும் நட்பும் பகையும் கொள்ளாமல் எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும்.
* பகவத்கீதையை சிறிதாவது படிப்பவன், கங்கைநீரை துளியாவது பருகியவன், இறைநாமத்தை உள்ளன்போடு ஒருமுறையாவது சொல்பவன் ஆகியோருக்கு உறுதியாக எமபயம் இல்லை.
-ஆதிசங்கரர்

ஜபம் செய்யும் திசையும் பலனும்

ஜபம் செய்யும் திசையும் பலனும் (ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு மஹா ஸ்வாமிகள்)






கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம்

தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்
தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை
தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வருமை
மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு
வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்
வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்
வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்
ஜபம் செய்யும் இடமும் பலனும் .....
வீடு- பத்து மடங்கு பலன் பலன்
கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன்
குளம்- ஆயிரம் மடங்கு பலன்
ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்
மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன்
சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன்
அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன்
சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன்


Friday 28 August 2015

பக்தனுக்காக சபதம் மீறிய கண்ணன்!

பக்தனுக்காக சபதம் மீறிய கண்ணன்!


 மகாபாரதப் போர் முடிந்தது. கிருஷ்ணன் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார். "ஸ்வாமி, தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள். இந்தப் பாவத்துக்கு நானும் காரணமாகிவிட்டேன். பாவம் போக்க என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.
இதற்கு பீஷ்மரே சரியானவர் என்று கூறி அவரிடம் அழைத்துச் சென்று, வந்த விவரத்தைச் சொன்னான் கண்ணன்.
பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்...
"ஏன் புது தெய்வத்தைத் தேடி வந்திருக்கிறாய்...? உன் அருகில் நிற்கிறானே கண்ணன்.... அவன் தெய்வமாகத் தெரியவில்லையா? அவன் பெருமையை சொல்கிறேன் கேள்...
பத்தாவது நாள் யுத்தம். நான் கெüரவ சேனைக்குத் தலைமை தாங்கிப் புறப்படுகிறேன். அப்போது துரியோதனன் வந்தான். "ஓய் பாட்டனாரே! உம்மைப் பற்றி எல்லோரும் பெரிய வீரன், மகா பலசாலி என்றெல்லாம் சொல்கிறார்களே... உம்மைக் கண்டு பரசுராமரே நடுங்குவார் என்கிறார்களே. ஆனால் உம்மால் பாண்டவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லையே.. நீர் கபடம் செய்கிறீர். எனக்குத் துரோகம் செய்கிறீர். இந்தப் பத்து நாள் யுத்தத்தில் நம் சேனைகளுக்குக் கடும் சேதம். இத்தனைக்கும் நீர் சேனாபதி. நாம் தோற்பதற்குக் காரணம் நீர். உமக்கு பாண்டவர்கள் மேல் பரிவு இருக்கிறது. உம் பிரிய பேரன்மார் பாண்டவர்களைப் பார்த்த மாத்திரத்தில் ஒன்றும் செய்யாமல் வந்துவிடுகிறீர்... உமக்கு இருப்பது பாண்டவர் மீதான பரிவு' என்று சொல்லி என்னைத் திட்டினான்.
"அஸ்தினாபுரத்தைக் காப்பேன்' என்று என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காத்து வரும் எனக்கு இப்படி ஒரு அவச்சொல் கேட்க சகிக்கவில்லை. அவன் சொன்ன வார்த்தைகளைச் சகிக்க மாட்டாமல் அவனிடம் ஒரு சபதம் செய்தேன். "இன்றைக்கு பாண்டவர்களுக்கும் கெüரவர்களுக்கும் நடக்கும் யுத்தத்தில் என்ன நடக்கிறது பார்.. நான் செய்யும் கோர யுத்தம் தாங்காமல், இந்தப் போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று சபதம் செய்த கிருஷ்ணனையே ஆயுதம் ஏந்தச் செய்கிறேன் பார்' என்று அவனிடம் சபதம் செய்தேன்.
அப்படியே நான் போர்க்களத்துக்கு வந்த வேகத்தில், துரியோதனன் நாவினால் என்னைச் சுட்ட வடு ஏற்படுத்திய கோபம்... வெறியோடு யுத்தம் செய்தேன். எதிரில் வந்தான் கண்ணன் அர்ஜுனனுடன்! அவன் மீது அம்பை எய்தேன். அவனை மட்டுமா அடித்தேன். விஷ்ணு பக்தனான நான் கண்ணனுக்கு சந்தனாபிஷேகம் செய்து திருப்பாதங்களைக் கழுவ வேண்டாமா..? அந்தப் போர்க்களத்தில் என்ன செய்தேன்...?
கண்ணன் மீது அம்பு பட்டு அவன் உடலிலிருந்து ஓடும் செங்குருதியால் அவன் பாதங்களை நனைத்து அபிஷேகம் அல்லவா செய்தேன். கிருஷ்ணனோ சிரித்துக் கொண்டிருந்தான்... ஆனால் நான் அடித்த அடியில் காண்டீபம் நழுவி மூர்ச்சையாகி விழுந்தான் அர்ஜுனன். பார்த்தான் கிருஷ்ணன். கையில் சக்ராயுதபாணியாக தேரிலிருந்து குதித்தான். அப்போது அவன் போட்டிருந்த மேல் வஸ்திரம் நழுவிக் கீழே விழுகிறது. அதைத் தாண்டிக் கொண்டு அவன் வருகிறான்.
நானோ, "அப்பா கிருஷ்ணா... அந்தப் பாவி துரியோதனன் போட்ட உப்பு போகட்டும். எனக்கு உன் சக்கரத்தால் மோட்சம் கிடைக்கட்டும்' என்று சொல்லிக்கொண்டு எதிர்கொண்டேன்.
அப்போது மயக்கம் தெளிந்து எழுந்தான் பார்த்தன். கையில் சக்கரத்தோடு என்னை நோக்கி ஓடி வந்த கண்ணனைக் கண்டான். உடனே கண்ணனின் கால்களைப் பிடித்துக் கொண்டு, "ஹே கிருஷ்ணா இந்தப் போரில் ஆயுதமெடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த நீ உன் சத்தியத்தை மீறலாமா?' எனக் கேட்டான்.
கண்ணன் சொன்னான்.... "என் சத்தியம் கிடக்கட்டும்... நீ செய்த சத்தியத்தை நான் காக்க வேண்டாமா? கிருஷ்ணன் பாதத்தில் நான் தஞ்சம்... அவன் என்னைக் காப்பான் என்றாயே... இப்போது இந்தக் கிழவன் உன் கதையை முடித்து விடுவான் போலிருக்கிறதே... நீ செய்த சத்தியத்தைக் காக்க என் சத்தியம் போனால் பரவாயில்லை...' என்று சொன்னான்.
அவர்கள் இருவர் பேசுவதும் என் காதில் விழுகிறது. உண்மையில் தர்மா... கிருஷ்ணன் தன் சத்தியத்தை மீறுவதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை. அர்ஜுனன் சத்தியத்தைக் காப்பதற்காகவும் ஆயுதம் ஏந்தவில்லை. காலையில் துரியோதனனிடம் நான் செய்தேனல்லவா ஒரு சத்தியம்... இன்று போர்க்களத்தில் கிருஷ்ணனையே ஆயுதம் எடுக்க வைக்கவில்லை என்றால் நான் கங்கையின் புத்திரன் இல்லை என்று. என்னுடைய அந்த சத்தியத்தைக் காப்பதற்காக, எனக்காக என் பிரபு ஆயுதம் எடுத்தான்..'' என்றார் பீஷ்மர் கண்களில் நீர் தளும்ப...

படித்து ரசித்து இன்புற்றது .........


Thursday 27 August 2015

சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?

சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?



சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும். சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போட வேண்டும். அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.
கடைசியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று "வந்தேன் வந்தேன் வந்தேன், இறைவனின் தரிசனம் கண்டேன், கண்டேன், கண்டேன் என மெதுவாக கூறி, இரு கைகளையும் மெதுவாக தட்டி, நன்றி சொல்லி வெளியே வர வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும். கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது. அவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும். கோயிலில் தரும் எந்த பிரசாதத்தையும் கண்ட இடங்களில் போடாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள இடங்களில் போட வேண்டும்.
கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது. கோயிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது. இறைவன் எளிமையையே விரும்புவான். அவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

Above Information taken from 

செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய .....சில குறிப்புகள் ...

செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய .....சில குறிப்புகள் ...


1.வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
2.ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.(வாசல் படி நரசிம மூர்த்திக்கு சொந்தம் ).
3.உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக
வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.
4.வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது/சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது,பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.
5.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.
6.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது
7.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.
வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.
8.அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
9.செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
10.செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
11.நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
12.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது.
13.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது,சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.
14.வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
15.ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் .(குபேர காலம் )
16.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.
17.தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.
18.செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.
19.சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
20.சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.
21.எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பம் / கல்கண்டு கொண்டு அணைக்கவேண்டும்.
22.வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
23.ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
24.வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
25.பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்? பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.
26.செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.
27.தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
28.காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப்படம் இவற்றை பார்க்கவேண்டும்
29.எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
30.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
31.வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும் .
32.எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.
சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
33.பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
34.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.இருகைகளும் கொண்டு தலையை சொரிய கூடாது .
35.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது,நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.
36.பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது,தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.
37.பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது.
38.தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.
39.எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
40.விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது,வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.
41.ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
42.குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள்.
43.எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான்.
நன்றாக வாழ்ந்த தம்பதியர் சொன்னது ......

ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

Wednesday 5 August 2015

ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.



அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.
வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.
வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.

உருத்திராக்கம் (ரூத்திராட்சம்) என்றால் ?

உருத்திராக்கம் என்றால் 


"உருத்திரர் + ஆக்கும் = உருத்திராக்கம்".
அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்களும் பதினெட்டாம்படிக் கருப்புகளும் வழங்கியுள்ள இந்துவேதத்திற்கும் இந்துவேத மதமான இந்துமதத்திற்கும் உரிய
i. நாற்பத்தெட்டு வகைப்பட்ட கடவுள்களுக்கும்
ii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட வழிபடு நிலை யினர்களுக்கும்
iii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தர்களுக்கும்
iv. நாற்பத்தெட்டு வகைப்பட்ட அருளாளர்களுக்கும்
v. நாற்பத்தெட்டு வகைப்பட்ட அருளாளிகளுக்கும்
vi. நாற்பத்தெட்டு வகைப்பட்ட அருளாடு நாயகங்களுக்கும்
vii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட மருளாளர்களுக்கும்
viii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட மருளாளிகளுக்கும்
ix. நாற்பத்தெட்டு வகைப்பட்ட மருளாடு நாயகங்களுக்கும்
x. நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஈசுவராச்சாரியார்களுக்கும்
xi. நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஆதிஈசுவராச் சாரியார்களுக்கும்
xii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட சிவாச்சாரியார்களுக்கும்
xiii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஆதிசிவாச் சாரியார்களுக்கும்
xiv. நாற்பத்தெட்டு வகைப்பட்ட பரமாச்சாரியார்களுக்கும்
xv. நாற்பத்தெட்டு வகைப்பட்ட ஆதிபரமாச் சாரியார்களுக்கும்
xvi. இதுவரை தோன்றியுள்ள நாற்பது சங்கராச்சாரியார்களுக்கும் (இனிமேல் தோன்றப்போகும் எட்டு சங்கராச்சாரியார்களுக்கும்)
xvii. இதுவரை தோன்றியுள்ள முப்பத்திரண்டு ஆதி சங்கராச்சாரியார்களுக்கும் (இனிமேல் தோன்றப்போகும் பதினாறு ஆதிசங்கராச்சாரியார்களுக்கும்)
xviii. நாற்பத்தெட்டு வகைப்பட்ட பத்தியாளர்களுக்கும்
xix. நாற்பத்தெட்டு வகைப்பட்ட சத்தியாளர்களுக்கும்
xx. நாற்பத்தெட்டு வகைப்பட்ட சித்தியாளர்களுக்கும்
xxi. நாற்பத்தெட்டு வகைப்பட்ட முத்தியாளர்களுக்கும்
இந்த இருபத்தோரு அருளுலகத்தவர்களை வணங்கும் வண்ணமாகத்தான் இருபத்தோரு உருத்திராக்க மாலையையே அருளுலகப் பயிற்சி முயற்சியாளர்கள் முதன் முதலில் அணிந்துகொள்ளும் மரபு பதினெண்சித்தர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது;
அதாவது, மேலே பட்டியலிட்டுக் காட்டப்பட்ட இருபத்தோரு வகைப்பட்ட அருளுலகத்தவர்களும் பேசுகின்ற ஒரே ஒரு மொழிதான் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி.
பின்குறிப்பு : "மனிதரை கடவுளாக்க உதவுவது உருத்திராக்கம்" எனவே எல்லாரும் உருத்திராக்கம் அணியலாம்.

ஒலிகளுக்கும் உருவம் உண்டு...!

ஓம் என்ற ஒலியிலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்பார் திருமூலர்.



"ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே!"

பிரணவத்துள் தோன்றியதே இந்த உலகத்தின் பஞ்ச பூதங்கள், அவற்றில் விளைந்த மாற்றங்களில் அசையும் உயிர்களும், அசையா உயிர்களும் உண்டாயின. 

இந்த உலகம் ஒலியின் வடிவம் என்பதை ஞானம் கைவரப் பெற்றவர்கள் அறிந்திருந்தனர். பல சப்தங்களின் பிரதிபலிப்பே உலகம் என்பார்கள் அவார்கள்.


ஒரு பேரொளி இந்த பிரபஞ்சத்தையே நிரப்பி இருக்கின்றது. உலகம் முழுதும் ஒளி, உலகமெங்கும் ஒலி. ஆனால் சில ஒளி களைத்தான் நம் கண்கள் பார்க்கின்றன. சில ஒலிகளைத்தான் நம் காதுகள் கேட்கின்றன.

அனால் ஒலிகளுக்கும் உருவம் உண்டு அதையும் பார்க்கலாம் என்கிறார்கள் சித்தர்கள். ஒலியைக் கேட்கமுடியும், அது எப்படி பார்ப்பது என்று யோசிக்கிறீர்களா?

மந்திரங்கள் ஒலிவடிவானவை. அந்த மந்திரங்களை கண்ணால் கண்ட சித்தர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆக, கண்ணால் ஒலியைக் காண்பது சாத்தியம் என்கிறார்கள் அவர்கள்.

நம்முடைய விருப்பங்களைத் தெரிவிக்கவும், நம்முடைய வேலைகளைக் குறித்தும் நாம் பேசுகின்றோம். இந்தப் பேச்சொலி நாம் வாய் திறந்து பேசும் முன் எங்கிருந்தது? மனதில் எண்ணமாக இருந்தது. அதற்க்கு முன் எப்படி இருந்தது?

அது எண்ணங்களும், நினைவுகளுமாக முதலில் சூட்சும சப்தமாக இருந்தது. அதன் பிறகே வாய் மூலம் வெளிப்பட்டது. இந்த சப்தங்களை நான்கு வகையாகப்பிரிப்பர். அவை,

1, வைகரி - செவியோசை.

2, மத்திமை - கருத்தோசை.

3, பைசந்தி - நினைவோசை.

4, பரை - நுண்ணோசை, என்பவை ஆகும்.

நம்முடைய ஒவ்வொரு எண்ணமும் சொல்லாக ஒலி வடிவம் பெறுவதற்க்கு முன் சூட்சும ஒலியாய் இருந்தவையே.அந்த சூட்சும ஒலியையே ஓம் என்கிறார்கள் சித்தர்கள்.

ஆக, ஓங்காரம் மூல சப்தம் எல்லாமந்திரங்களுக்கும், ஒலிகளுக்கும் அதுவே ஆதாரம் என்கிறார்கள் சித்தர்கள்.

இது பற்றிய மேலும் விபரமாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்..

சித்தர்கள் கண்ட கோவிலும், மனிதர்கள் கட்டிய கோவிலும்..!

சித்தர்கள் கண்ட கோவிலும்,
மனிதர்கள் கட்டிய கோவிலும்..!



'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
-திருமூலர்.
நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து,வென்று சிவத்தை(கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை(சித்தர்களை)வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.
"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"
- திருமூலர்.
என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"
என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,
"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!
என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.
உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).
கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.
-வள்ளலார்.
குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.
-கருவூர் முனிவர்.
மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :;
சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.
எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.
இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.
இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.
எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!
ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.